Friday 13 June 2014

மனம் ஒரு முகக் கண்ணாடியாம்

மனம் ஒரு முகக் கண்ணாடியாம் 2  
பிரதிபலிக்குதே அதில் அனைவரும் காண
நன்மை தீமையாம் இருமையின் அன்சுவை 

மனம் ஒரு முகக் கண்ணாடியாம் 2  

மனமே இறைவன், மனமே ஈசனும்,
மனத்திற் சிறந்தது எதுவுமில்லை
மனமே பேரொளியாய்த் தோன்றும் போது
பிரகாசமாகுதே புவியெங்கும்
மனமெனும் கண்ணாடியில் மாசெனும் தூசு
படிந்திடலாமோ மானிடனே?

மனம் ஒரு முகக் கண்ணாடியாம் 2  

மனம் ஒன்றேதான் இன்பதுன்பத்திற்கு
காரணமாகுதய்யா
மனதின் ஆயிரம் கண்களிலிருந்து
தப்புவ தரிதாமே

உலகிலிருந்து ஓடி ஒளியலாம்,
மனதை தப்புவதாரோ?

மனம் ஒரு முகக் கண்ணாடியாம் 2  


No comments:

Post a Comment