Friday 13 June 2014

அன்பின் வழியில்

அன்பின் வழியில் யார் நடந்தாலும்
அவனும் ராமனும் ஒன்று
அழுபவர் கண்களை யார் துடைத்தாலும்
அவனும் ராமனும் ஒன்று

அன்பின் வழியில் யார் நடந்தாலும்
அவனும் ராமனும் ஒன்று

பெற்றவர் உள்ளம் பெருமிதம் கொள்ளும்
பிள்ளையும் ராமனும் ஒன்று
மற்றவர்க்கெல்லாம் நல்வழி காட்டும்
மனிதனும் ராமனும் ஒன்று

அன்பின் வழியில் யார் நடந்தாலும்
அவனும் ராமனும் ஒன்று

ஒரு மணம் புரிந்து நிறைவுடன் வாழும்
ஒருவனும் ராமனும் ஒன்று
அருள்நெறி கருணை அமைந்தவன் எவனோ
அவனும் ராமனும் ஒன்று

அன்பின் வழியில் யார் நடந்தாலும்
அவனும் ராமனும் ஒன்று

தர்மத்தைக் காத்திட உயிரையும் வழங்கும்
தலைவனும் ராமனும் ஒன்று
தன்னலம் துறந்து மன்னுயிர் காக்கும்
வள்ளலும் ராமனும் ஒன்று

அன்பின் வழியில் யார் நடந்தாலும்
அவனும் ராமனும் ஒன்று

மண்வளம் பெருகிட மழை நீர் பொழியும்
மேகமும் ராமனும் ஒன்று
பொன்னொளி திகழும் கதிரவன் என்னும்
கீதையும் ராமனும் ஒன்று

அன்பின் வழியில் யார் நடந்தாலும்
அவனும் ராமனும் ஒன்று


3 comments:

  1. Need mp3 of this song. Is it possible to get. Pls upload if you have.

    ReplyDelete
  2. அருமையான பணி.. நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete